அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 2: 'நற்குணங்களை நிறைவாக்குவதற்காக..'


ந்தச் சிங்காரப் பூவுலகில் மனித வருகைகள் பலவிதம். பொன்-பொருளுக்காக.. மண்-பெண்ணுக்காக.. சித்தாந்த சீர்த்திருத்தங்களுக்காக.. என்று மனித வருகைகள் பலவிதம்.

ஆனால், நபிகளாரின் வருகையோ முற்றிலும் வேறுபாடானது. அதை த் தமது திருவாயால் நபிகளார் இப்படிக் கூறுகிறார்கள்: "நற்குண்களை நிறைவாக்குவதற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்!" 
(இமாம் மாலிக் (ரஹ்), முஅத்தா)

இறைவன் மற்றும் அவது இறுதித் தூதர் முஹம்மது நபிகளாரின் (ஸல்) வழிகாட்டுதலே இஸ்லாமிய வாழ்க்கை நெறியாகும். இந்தச் சமூக அமைப்பின் கட்டமைப்பு முழுவதும், நல்லொழுக்கத்தின் அடிப்படையில் அமைந்தது. ஒழுக்கத்திலான உயரிய ஆளுமைப் பண்பாளர்களை உருவாக்குவது நபிகளாரின் தலையாய பண்பாக இருந்தது.

"வணக்கத்துக்குரியவன் ஒரே இறைவனைத் தவிர வேறு கடவுளர் இல்லை! முஹம்மது நபிகளார் இறைவனின் தூதர்!" - என்ற 'கலிமா'வை அதாவது சொற்றொடரைப் பிரகடனப்படுத்துபவர் முஸ்லிம்கள் ஆவர். இறைவனின் அடிமைகளான இவர்கள் மீது தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற வணக்கங்கள் கடமையாகின்றன.

இவற்றில் முதல் தர இறைவணக்கம் .. தொழுகை.

"திண்ணமாக தொழுகை, மானக்கேடான மற்றும் தீய செயல்களைத் தடுக்கிறது!" (29:45) என்கிறது திருக்குர்ஆன்.

"உங்களில் ஒருவருடைய வீட்டருகே ஆறு ஒன்று ஓடுகிறது.அதில் ஒருவர் நாள்தோறும் ஐவேளை குளிக்கிறார்.அவருடைய உடலில் அழுக்குச் சேருமா?" - நபிகளார் தமது தோழர்களிடம் கேட்டார்கள்.

"சிறிதளவு அழுக்குக்கூட சேராது இறைவனின் தூதரே!" - தோழர்கள் பதிலளித்தார்கள்.

"ஆங்..இதே போன்றதுதான் ஐவேளைத் தொழுகையும். இறைவன் இந்தத் தொழுகைகளின் மூலமாக பாவக்கறைகளைப் போக்கிவிடுகிறான்!" (புகாரி, முஸ்லிம்)

தொழுகையைக் குறித்து நபிகளாரின் உவமையோடு கூடிய விளக்கமிது.

நோன்பு மற்றொரு இறைவணக்கம்.

"இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு முன் இருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர்கள் மீது கடமையாக்கப்பட்டதைப் போல, நோன்பு உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் இறையச்சமுடையவர்களாக மாறலாம்!" (21:83) என்கிறது திருக்குர்ஆன்.

"எவர் (நோன்பு நோற்றுக் கொண்டே) பொய் சொல்வதையும், பொய்யான முறையில் செயல்படுவதையும் விட்டுவிடவில்லையோ அவர் பசித்திருப்பதையும், தாகித்திருப்பதையும் பற்றி இறைவனுக்கு எந்தவிதமான அக்கறையுமில்லை!" (அபுஹீரைரா (ரலி) - புகாரி)

நோக்கத்தை அறியாமல் நோற்கும் நோன்பு வீணாகிவிடும் என்று எச்சரிக்கிறார்கள் நபிகளார்.

அடுத்தது. ஜகாத்.. சமூக நலநிதி. பொருளால் இறைவனை வழிபடும் முறைமை.

"தொழுகையை நிலைநிறுத்துங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்!"-(2:43) என்கிறது திருக்குர்ஆன்.

இருப்பவரின் செல்வம் ஒரு வரம்பைத் தாண்டும்போது, ஆண்டுதோறும் தம் செல்வத்திலிருந்து ஏழைகளுக்கு வழங்க வேண்டியது ஜகாத். இல்லாதவரின் உரிமை இது.

"நான் நபிகளார் இவ்வாறு சொல்லக் கேட்டிருக்கின்றேன். ஜகாத்துக்குரிய பங்கு கலந்திருக்கும் பொருளிலிருந்து ஜகாத்தைப் பிரித்துவிடுங்கள். இல்லாவிட்டால்.. அது அசல் பொருளையே அழித்துவிடும்!" (அன்னை ஆயிஷா(ரலி), மிஷ்காத்)

கடைசியான இறைவணக்கம்.. ஹஜ். வசதி படைத்தோர் ஆயுளில் ஒருமுறை மேற்கொண்டு கஅபாவை சந்திக்கச் செல்லும் புனித யாத்திரை.

"நீங்கள் (ஹஜ்ஜுக்காக) வழித்துணைச் சாதனங்களைக் கொண்டு செல்லுங்கள். உண்மை என்னவென்றால்... வழித்துணைச் சாதனங்களில் எல்லாம் மிக உயர்ந்தது இறையச்சம்தான்!" (2:197) என்கிறது திருக்குர்ஆன்.

நபிகளார் அறிவுறுத்துகிறார்கள்:

"யாரொருவர் இந்த (கஅபா) ஆலயத்தை தரிசிக்க வந்து, மன இச்சைகள் சம்பந்தமான சொற்களைப் பேசாமல் .. இறைவனுக்கு மாறு செய்யும் செயல்களைச் செய்யாமல் இருந்தால்... அன்று பிறந்த குழந்தையைப் போல அவர் தன் வீட்டுக்குத் திரும்பிச் செல்வார்! - (இறைவன் அவரது எல்லாப் பாவங்களையும் மன்னித்துவிடுவான்!)"

படைத்தவனுக்கு அஞ்சி, ஒழுக்கத்துடன் வாழ்வது... உயரிய சமூகம் அமைத்து அமைதியுடன் வாழ்வதே... தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற வணக்கங்கள் சொல்லும் அடிப்படைச் செய்தி.

Related

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை 5916937846789301507

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress