அழைப்பது நம் கடமை - 25: 'நீதியை கடைப்பிடியுங்கள்!'



மனித விழுமியங்களின் உயரிய சிகரமான இஸ்லாம், போரில் ஈடுபடாத அப்பாவிகளையும், பெண்கள், குழந்தைகள், முதியோர், ஊனமுற்றோர், சரணடைந்த வீரர்கள் இவர்களைக் கொல்வதற்கோ, துன்புறுத்துவதற்கோ ஒருபோதும் அனுமதிப்பதில்லை.

ஆப்கானிஸ்தான், இராக் நாடுகளுக்கு எதிராக அமெரிக்க ஆக்கிரமிப்பு படையினர் மேற்கொண்ட அட்டுழியப் பின்னணியில் இஸ்லாத்தின் கொள்கைப்பூர்வமான கருத்துக்களை அழைப்பாளர்கள் உள்வாங்க வேண்டும். 

அது போர்க்காலமோ, அமைதி காலமோ எந்தச் சூழலானாலும் இஸ்லாம் திட்டவட்டமான நடைமுறைகளையே அமல்படுத்தச் சொல்கிறது. மனித உரிமை மீறல்களை அது என்றும் அனுமதிப்பதில்லை. இஸ்லாமிய சட்டவியல் போர்க்காலத்தில் சில சட்டங்கள், போரில்லாத காலத்தில் சில சட்டங்கள் என்று கூறுபோடுவதில்லை. 

உலக வரலாற்றிலேயே அவை சமயம் சார்ந்த வரலாறானாலும் அல்லது அரசியல் சார்ந்த வரலாறானாலும் கைது செய்யப்பட்ட எதிரிகளிடம் யாரும் பரிவையும், அன்பையும் காட்டியதில்லை. அவர்களது உரிமைகளுக்கு உயர்ந்த மதிப்பளித்ததும் இல்லை; இஸ்லாத்தைத் தவிர! இந்த மனித உரிமைகள் நேற்றைய ஜெனீவா உடன்படிக்கைக்கு முன்னமே 1434 ஆண்டுகளாக இஸ்லாத்தில் நடைமுறையில் உள்ள மானுடவியல் சட்டங்கள்.

"இன்னும் உங்களோடு போர் புரிபவர்களுடன் நீங்கள் இறைவனின் பாதையில் போர் புரியுங்கள். ஆனால், நீங்கள் வரம்பு மீறாதீர்கள். ஏனென்றால்.. வரம்பு மீறுபவர்களை இறைவன் நேசிப்பதில்லை!"- (2:190) என்கிறது திருக்குர்ஆன்.

போருக்கான அனுமதி இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் அமைந்தது. 

1. வலியச் சென்று தாக்குவது கூடாது. போரிடுவது தற்காப்புக்காக மட்டுமே!

2. அந்தப் போரும் வரம்பு மீறாத நிலையில் இருக்க வேண்டும். 

தற்காப்புக்கான போர்கூட ஆயுதமேந்தாத அப்பாவிகளுக்கு எதிரான போராக இருக்கக்கூடாது.

போரில் எதிரி வீரர்கள் கைது செய்யப்படுவது தவிர்க்க இயலாதது. அப்படி பிடிபடும் வீரர்கள் சம்பந்தமாக இஸ்லாம் சொல்வது இதுதான்:

1. எதிரி நாட்டு கைதிகளை பெருந்தன்மையோடு மன்னித்து விடுதலை செய்துவிட வேண்டும். அல்லது

2. மீட்புப் பணம் பெற்று அவர்களை விடுதலைச் செய்திட வேண்டும்.

திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது:

"இறை நிராகரிப்பாளர்களை நீங்கள் போரில் சந்திக்க நேர்ந்தால்.. முதல் வேலை கொல்வதுதான்! அவ்வாறு அவர்களை நீங்கள் முற்றிலும் அடக்கி ஒடுக்கிவிட்டால் .. கைதிகளை இறுக்கமாக கட்டிவிடுங்கள். அதன் பிறகு - அவர்கள் மீது நீங்கள் - கருணை காட்டலாம் அல்லது ஈட்டுத் தொகை பெறலாம். உங்களுக்கு இதற்கான உரிமை இருக்கிறது. போர் ஓயும் வரையில் இதுதான் நீங்கள் செய்ய வேண்டிய பணி!"- (47:4)

போர்க்களத்தில் போரிடும் வீரருக்கு இரண்டே இரண்ட வழிகள்தான் இருக்கும்: ஒன்று கொல்வது அல்லது கொல்லப்படுவது.

எதிரிகளைக் கண்டதும், துப்பாக்கி விசையை இயக்காதவர் எதிரிகளின் தோட்டாக்களால் கொல்லப்படுவார். அதேபோல, தனது தரப்பு படையினருக்கு எந்த இழப்பீடும் நேராமல் பார்த்துக் கொள்வது சக படை வீரனின் மற்றொரு இன்றியமையாத பணி. அதனால், போர்முனையில் எதிரியின் தரப்பில் முன்னேறிச் செல்லும்போது நடைமுறை வழக்கப்படி காயமுற்று வீழ்ந்திருக்கும் வீரர்கள்கூட ஆபத்தானவர்கள்தான்! அவர்கள் எந்த நிலையிலும், துப்பாக்கியை இயக்கலாம். கையெறி குண்டுகளை வீசலாம். அதனால், அவர்களின் ஆயுதங்களைப் பறித்து நிராயுதபாணிகளாக்கி விலங்கிடுவது அல்லது தேவைக்கேற்ப மருத்துவ சிகிச்சையளிப்பது என்பதே திருக்குர்ஆன் வலியுறுத்தும் மனிதநேயப் பண்பாகும்.

ஆனால், தற்போதைய போர்களில் இந்த உயரிய நெறிமுறைகள் பின்பற்றப் படுவதில்லை. வீழ்ந்து கிடக்கும் வீரன் நெஞ்சில் பைனட் என்னும் துப்பாக்கிச் சனியனை செருகி கொலை செய்துவிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

போரில் எதிரிகளோடு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக இஸ்லாம் திட்டவட்டமாக வழிகாட்டுகிறது.

போர் நியதிப்படி கொல்வது அல்லது வெற்றிபெற்றதும் கைது செய்யப்பட்டவர்களை கருணை காட்டி மன்னித்தோ, பணயத் தொகையைப் பெற்றுக் கொண்டோ விடுதலை செய்துவிடுவது.



இதில் இரண்டாவது கருத்துக்கு இடமேயில்லை. கைதிகளை சிறைப்பிடித்து விலங்குகளைப் போல கூண்டுகளில் அடைத்து நிர்வாணமாக்கி, துன்புறுத்தி, கற்பழித்து, வெறிநாய்களை ஏவிவிட்டு.. கைதிகள் படும் வேதனைகளைப் புகைப்படம் எடுத்து ரசித்து.. இவை எல்லாம் நாகரீக உச்சாணியில் இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் அமெரிக்கா போன்ற மனித குல விரோதிகளுக்குப் பொருந்தலாம். ஆனால், இஸ்லாம் இந்த மனித உரிமை மீறல்களை, காட்டுமிராண்டித்தனங்களை அனுமதிப்பதேயில்லை.

இரண்டாவது அம்சமான பணயத் தொகை பெறுவது என்பது...

கைது செய்யப்பட்டவர்கள் நிபந்தனைகள், ஒப்பந்தங்கள் அடிப்படையிலோ, மீட்புத் தொகையின் அடிப்படையிலோ, கைதிகள் பரிமாற்றத்தின் மூலமாகவோ செய்யப்படும் விடுதலையாக இருக்கலாம்.



ஆனால், எக்காரணம் கொண்டும் கைது செய்யப்படும் எதிரி வீரர்களை கம்பிகளுக்குப் பின்னால் முடிவில்லாமல் அடைத்துத் துன்புறுத்துவதற்கு அனுமதியில்லை!

- இறைவன் நாடினால்.. அழைப்பது தொடரும்.

Related

அழைப்பியல் 9026149229074643111

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress