ஒரு சொல்: 'சலனமற்ற மனம் வேண்டும்'
https://udayathaaragai.blogspot.com/2013/12/blog-post_1206.html
இறைவழியில் தான் செய்த தர்மத்தைக் கொண்டோ, தான் செய்த நன்மைகளைக் கொண்டோ உண்மை முஸ்லிம் பூரிப்படைவதில்லை. மாறாக, தன்னைத் தாழ்ந்தவன் என்று நினைத்து அடக்கமாக இருப்பான்.
பெருமை கொள்வது நற்செயல்களை அழிக்கும் ஆற்றல் படைத்தது. தன்னை மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்னும் எண்ணத்துடன் ஒருவன் நற்செயல் புரிந்தால், அவன் இறைவனிடத்தில் எவ்வித நற்கூலிக்கும் தகுதியற்றவன். ஏனெனில், தான் செய்த நன்மைக்கு அவன் உலகத்திலேயே நற்கூலியை, பாராட்டைப் பெற்றுவிட்டான்.
- மௌலானா மௌதூதி (ரஹ்)

