அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 19: 'மறக்க முடியாத அந்த நாள்!'

பெரியவர்கள் நபிகளார் மீது அன்பு கொண்டிருப்பவர்கள் என்பது யதார்த்தமானது. ஆனால், சிறுவர்கள் நபிகளாரை நேசிப்பது விந்தையிலும் விந்தையானது! இந்த நேசமானது காலம் கடந்து.. எல்லைகள் கடந்து.. தொலைவுகள் கடந்து.. மொழிகள் கடந்து நமது பிள்ளைகளையும் ஆக்கிரமித்திருப்பது முஸ்லிம்களுக்கே உரிய பிரத்யேகமானது!

அந்த நாள் மறக்க முடியாத நாளாக மதீனத்துப் பிள்ளைகளின் மனதில் படிந்து போனது.

குழந்தைகளின் திருநாளாக வரலாற்ற
ில் பொன்னெழுத்துக்களில் பதிவாகியுள்ளது.

மதீனா மாநகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது.

முஸ்லிம்கள் மகிழ்ச்சிக் கடலில் மிதந்திருந்தார்கள். ஒரு பெரும் விழாவை எதிர்நோக்கி அவர்கள் காத்திருந்தார்கள்.

குழந்தைகளுக்கோ உற்சாகம் தாளவில்லை. வரவேற்பதற்கான பாடல்களை திரும்பத் திரும்பப் பாடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.

அந்த நாளை மதீனாவாசிகள் ஒவ்வொருவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்க... நாட்கள் கழிந்தன.

குழந்தைகள் அந்த நாளுக்கான ஆடைகளைத் தேர்வு செய்து தயாராக வைத்திருந்தார்கள்.
அப்படி அவர்கள் யாரைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறர்கள்?

இறைவனின் திருத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனாவுக்கு வரபோகும் திருநாள் அது. சந்தோஷத்திலும் சந்தோஷம் தரும் நன்னாள்! வரலாற்றுச் சிறப்பு மிக்க 'ஹிஜ்ரத்' நாள். சந்தோஷம் இருக்காதா பின்னே!

மதீனாவாசிகள் குழந்தை,குட்டிகள் சகிதமாக மகிச்சியில் திளைத்ததில் வியப்பில்லையே! ஒவ்வொரு நாளும் ஆவலாய் எதிர்பார்த்துக் காத்திருந்ததில் அதிசயம் இல்லையே! ஏனென்றால்.. வரப்போவது.. அருமை நபி .. கருணை நபி.. நபி பெருமானார் ஆயிற்றே!

அந்த நாளும் வந்தது.

மக்கள் மதீனாவின் எல்லையில் வந்து காத்திருந்தார்கள்.நேரம் ஆமை வேகத்தில் மெதுவாக நகர்ந்தது.

"அதோ..! அதோ..!!இறைத்தூதர்! அதோ வருகிறார்கள்!"

மக்களின் உற்சாகக் குரல் பாலைவனம் எங்கும் எதிரொலித்தது. அந்தச் சத்தத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பேரீச்ச மரக்கீற்றுகள் அசைந்தாடின.

குழந்தைகளின் முகமோ பிரகாசத்தால்..மின்னியது. எல்லோரும் முன்வரிசைக்கு ஓடிவந்தார்கள். முன்னரே கவனமாகத் தயாரித்து வைத்திருந்த வரவேற்புப் பாடலைப் பாட ஆரம்பித்தார்கள்.

குழந்தைகளைக் கண்டதும் அன்பு நபியின் முகம் மலர்ந்தது.

நபிகளார் குழந்தைகளின் வரவேற்பை அதிகம் ரசித்தார்கள். பெண் குழந்தைகளின் இனிய பாடல்களில் மனதைப் பறிகொடுத்தார்கள்.

குழந்தைகள் தம்மீது அளவுக்கு அதிகமான அன்பு வைத்திருந்தது நபிகளாருக்குத் தெரியும். இருந்தும் குழந்தைகளிடம் புன்முறுவலுடன் கேட்டார்கள்:

"உங்களுக்கு என் மீது இவ்வளவு பிரியமா பிள்ளைகளே!"

"ஆமாம்... ஆமாம்... இறைவனின் தூதரே, தங்கள் மீது எங்களுக்குக் கொள்ளை விருப்பம்"

சிறுவர்-சிறுமிகள் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தார்கள்.

"நாங்கள் எல்லோரும் தங்களை அதிகம் நேசிக்கின்றோம் இறைவனின் தூதரே!"-என்றார்கள் தொடாந்து ஒரே குரலில்.

இதைக் கேட்டதும் நபிகளாரின் முகம் ரோஜாப்பூ போல பூத்தது.

"குழந்தைகளே, நானும் உங்களை அதிகம் அதிகமாக நேசிக்கின்றேன் தெரியுமா?" - என்றார்கள் அன்பொழுக.

நபிகளாரின் இந்தப் பதிலைக் கேட்டதும் குழந்தைகளுக்குத் தலை - கால் புரியவில்லை.

உற்சாக மிகுதியால் "ஓ..! ஓ...!!" - என்று சத்தமிட்டார்கள். நபிகளாரை இன்னும் உற்சாகத்துடன் வரவேற்றார்கள்.

அது ஓர் அற்புதமான நாள்!

மதீனாவாசிகள் என்றென்னும் மறக்க முடியாத நாள்!

அன்பு நபிகளார் மக்காவைத் துறந்து மதீனா வந்தடைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நன்னாள்!

குழந்தைகளின் திருநாள்!

 `````` இறைவன் நாடினால்... அருட்கொடைகள் தொடரும்.

Related

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை 3503817968416494138

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress