அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 12: பாவங்களுக்கான பரிகாரம்!

பாவங்களுக்குப் பரிகாரம் தேடிச் சென்றால்.. இவர்கள் பரிகாரம் என்ற பெயரில் பணம் பறிப்பார்கள்! பூஜை புனஸ்காரங்கள்தான் தீர்வு என்பார்கள். மீண்டும் மீண்டும் மடமையில் சிக்க வைப்பார்கள்.

அந்த மனிதர் பாவங்களுக்கான பரிகாரம் தேடி நபிகளாரை சந்திக்க வந்தார். அவருக்கு நபிகளார் எத்தகைய வழிமுறையைக் காட்டினார்கள்.

இதோ.. இன்றைய அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடையில்..

அவர் சோகத்துடன் இருக்கிறார் என்பதைப் பார்த்தவுடனேயே சொல்லிவிடலாம்.

உண்மையிலேயே அந்த மனிதரின் உள்ளதில் மலைப்பாறையாய் சோகம் அழுத்திக் கொண்டிருந்தது. வேதனை கடலலையாய் ஆர்ப்பரித்தது. நபிகளாரிடம் அவர் பேசிய பேச்சு, அதை உறுதிப்படுத்தியது.துக்கம் தொண்டையை அடைத்ததால்.. மேற்கொண்டு பேச முடியவில்லை. தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள அவருக்கு சிறிது நேரம் பிடித்தது. மறுமையில் இறைவன் தன்னை தண்டிப்பான் என்ற இறையச்சம் அவரது உள்ளம் முழுக்க நிறைந்திருந்தது. அவர் துடியாய் துடித்தார். அழுது அரற்றினார்.அந்த மனிதரின் நிலைமை நபிகளாரை பெரிதும் பாதித்தது. "சகோதரரே, உங்கள் தாயார் உயிருடன் இருக்கிறார்களா?"ஆனால், நபிகளாரோ அப்படி நடந்து கொள்ளவில்லை. அந்த மனிதர் செய்த பாவம் என்ன என்பதைக் குறித்தும் கேட்கவில்லை. நபிகளாரின் கேள்விக்கு அவர் பதில் சொன்னார்:


நடையில் தள்ளாட்டம். முகத்திலோ பெரும் வாட்டம். 

உடைந்துவிடுவதுபோல தழுதழுத்த குரல். அவர் கவலையோடு நபிகளாரின் திருச்சமூகம் தேடி சென்று கொண்டிருந்தார்.

"இறைவனின் தூதரே, நான் பெரும் பாவம் ஒன்றை செய்துவிட்டேன்...."

"இறைவனின் தூதரே, நான் இறைவனின் கட்டளையை மீறிவிட்டேன். ஆமாம்! நான் இறைவனின் கட்டளையை மீறிவிட்டேன். அய்யகோ, எனது பாவமன்னிப்புக்கு நான் என்ன செய்வேன்? நான் எப்படி இறைவனின் மன்னிப்பைப் பெறுவேன்?"

"... எனக்கு மன்னிப்பு கிடைக்குமா? இறைவனின் தூதரே? பாவமன்னிப்பு கிடைக்குமா? நான் மன்னிக்கப்படுவேனா இறைவனின் தூதரே, மன்னிக்கப்படுவேனா?"

மனிதன் தவறிழைப்பது சகஜம்தான்! ஆனால், செய்த தவறை உணர்ந்து.. பாவமன்னிப்புக்காக இறைவனின் பக்கம் திரும்புவதல்லவா மனிதப் பண்பு!

நபிகளாரின் கண்களில் இரக்கம் சுரந்தது. அவரை அனுதாபத்துடன் பார்த்தார்கள். பரிவோடு சொன்னார்கள்:

இறைத்தூதர் தனது பாவச் செயல் குறித்து விசாரிப்பார். இறைவனின் கட்டளையை மீறியது குறித்துக் கோபப்படுவார் என்று வந்தவர் எதிர்பார்த்திருந்தார்.

செய்த தவறை உணர்ந்து பரிகாரம் தேடிவந்தவருக்கு வழி காட்டுவதிலேயே கவனமாக இருந்தார்கள்.

"இல்லை இறைவின் தூதரே, எனது தாயார் இறந்து பல ஆண்டுகளாகி விட்டன."

"சரி.. உமது சின்னம்மா அல்லது சித்தி இருக்கிறார்கள் அல்லவா?"

அதைக் கேட்டு அந்த மனிதரின் முகம் மலர்ந்தது.

"ஆமாம்... ஆமாம்.. இறைவனின் தூதரே, எனது சிறிய தாயார் உயிருடன்தான் இருக்கிறார்"

அந்த மனிதருக்கு உள்ளத்தில் நம்பிக்கைப் பிறந்தது. நபிகளார் தனது பிரச்சினைக்கு தீர்வு சொல்ல இருக்கிறார்கள் என அவர் ஆவலுடன் காத்திருந்தார்.

"...நீங்கள் உங்கள் சிறிய தாயார நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள். அவரது எல்லா தேவைகளையும் தட்டாமல் நிறைவேற்றுங்கள். அவருக்குத் தேவையான பணிவிடைகளை முகம் கோணாமல் செய்து வாருங்கள்.!"

அதைக் கேட்டு பாவமன்னிப்புக்கான வழிதேடி வந்தவரின் மனச்சுமை, பெருமளவில் குறைந்து போனது. அந்த மனிதரின் பாவமன்னிப்புக்கான வழியும் பிறந்தது. நபிகளாரின் அறிவுரையால் அவரது மனம் மகிழ்ச்சியால் நிறைந்தது.

"நிச்சயமாக... நிச்சயமாக... தாங்கள் சொன்னபடி செய்வேன் இறைவனின் தூதரே!" – உற்சாகம் தாளாமல் அவர் வாய்விட்டே கத்தி விட்டார்.

"... உம்மால் முடிந்த எல்லா பணிவிடைகளையும் உமது சிறிய தாயாருக்கு சிறப்பாக செய்துவாருங்கள். இதன் மூலமாக உமது பாவங்களுக்கு மன்னிப்புக் கிடைக்கும். உமது நல்ல பணிகள் பாவக்கறைகளைப் போக்கிவிடும்!-" என்றார்கள் நபிகளார் கருணையோடு !

தாயின் சேவை இறைவனை மகிழ்விக்கும். பாவங்களைப் போக்கிவிடும் பாவமன்னிப்புக்கான நுழைவாயிலாகிவிடும் என்ற பரிகாரத்தை சமூகத்துக்குள்ளேயே, உறவுகளுக்கள்ளேயே தேடிக்கொள்ளும்படி நபிகளார் அறிவுறுத்துகிறார்கள்.

மிகச் சிறந்த இத்தகைய அறிவுரைகளும், அந்த அறிவுரைகளின் மூலமாக சமூகத்தின் அடித்தளங்களான உறவுமுறைகளை முற்படுத்தியதும் இஸ்லாத்தை எதிர்ப்போருக்குப் பிடிக்கவில்லையோ என்னவோ?


- இறைவன் நாடினால். அருட்கொடைகள் தொடரும்.

Related

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை 52180288234179980

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress