ஒரு சொல்: 'நல்லோரே நற்சமுதாயம் சமைப்பர்!'
http://udayathaaragai.blogspot.com/2013/04/blog-post_29.html
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் ரூ.20 கோடி செலவழித்தார்கள். இவ்வளவு பெரும் பணத்தைச் செலவழித்து பதவிக்கு வருபவர்களிடம் நாணயத்தை எதிர்பார்க்க முடியாது.
ஒரு நல்ல, நேர்மையான, அர்ப்பணிப்பு உணர்வுள்ள, தேசபக்தியுள்ள அரசியல் தலைமை இருந்தால்தான் நாட்டில் ஒரு நல்ல சூழ்நிலை ஏற்பட முடியும். அப்போதுதான் நாணயமான அரசியல்வாதிகளைப் பார்க்க முடியும்.
ஒரு நல்ல நாட்டை நமது தலைவர்கள் நமக்குக் கொடுத்துச் சென்றார்கள். ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது. இன்றைக்கு உள்ள நிலையில் இந்த நாட்டையும், சமுதாயத்தையும் அப்படியே நம் பிள்ளைகளுக்கும், பேரன் - பேத்திகளுக்கும் கொடுத்துச் சென்றால் அதைவிட பெரிய பாவம் இருக்க முடியாது. அவர்களுக்கு நாம் செய்யும் துரோகம் வேறொன்று இருக்க முடியாது.
ஒரு ராஜாவால்.. ஒரு ராணுவத்தால் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியாது. அந்த சமுதாயத்தில் உள்ள நல்லவர்களால்தான் நல்ல சமுதாயம் உருவாகும்.
- ஆடிட்டர் குருமூர்த்தி (முதுபெரும் தலைவர் இரா.செழியனின் 90 வயது நிறைவு விழாவில் பேசியது)