அழைப்பது நம் கடமை-19, ''அடிப்படை விஷயங்களும், அழைப்பாளர்களும்!''



உலகின் பல பகுதிகளில் சிறுபான்மையினராக வசிக்கும் முஸ்லிம்கள் தத்தம் பகுதிகளில் முஸ்லிம் அல்லாத சகோதரர்களுடன் கலந்து பழகிவருகிறார்கள். அதேபோல, இந்தியா போன்ற இறையருள் சொரியப்பட்ட நாட்டில் வாழும் மக்களின் இந்த நெருக்கம் இன்னும் அதிகம். அதிலும் குறிப்பாக, தமிழகம் போன்ற பெரியார் மண்ணில் ... அமைதி பூங்காவில் வசிக்கும் மக்கள் சொந்த சகோதர நெருக்கத்தை விட மாமன் மச்சான் உறவுமுறைகளையும் தாண்டி நெருக்கமாக பழகிவருகிறார்கள்.

இந்த உறவில் எப்போதும் சகோதரத்துவத் தோழமை நேசம் இருக்கும் என்பதற்கு எத்தகைய உத்திரவாதமும் இல்லை. வகுப்புவாத விஷமிகளால் சக சகோதர உறவில் பேதங்கள் உருவாவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. இதன் உச்சக் கட்டமே வகுப்புக் கலவரங்கள் சமூக நல்லிணக்க சீர்குலைவுகள்.

இன்று நமது தாய் மண்ணில் நடந்துவருவதும் இதுதான்.

வகுப்புவாத சக்திகள் காலங்காலமாக இந்த மண்ணில் நிலவிவரும் சகோதர உறவைத் துண்டித்து ரத்த ஆற்றைப் பாய்ச்சும் முயற்சியில் பெரும் பகுதி வெற்றிபெற்று வருகின்றன.

கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக,

  • >>>>ஜனசங்க் என்ற வகுப்பு தீவிரவாத இயக்கத்தில் ஆரம்பித்து..
  • >>>>ஆர்.எஸ்.எஸ் என்ற சிந்தனை அறிவு ஜீவிகளிடையே வேர்விட்டு..
  • >>>>அதிலிருந்து பி.ஜே.பி. என்ற அரசியல் இயக்கமாக கிளைவிட்டுப் படர்ந்துள்ளது.



மக்களவையில் சொற்ப எண்ணிக்கையில் கால்பதித்து இன்று பொய்மையையே கொள்கையாக்கி நிலைக்கொண்டுள்ளது.

இந்த நச்சு விருட்சத்தின் கிளைகளான எண்ணிலடங்காத வகுப்புவாதப் பிரிவு இயக்கங்கள் இந்திய மண் முழுவதும் பரவி கிளைவிட்டுள்ளன. பகுதிதோறும், சிவசேனை, இந்து முன்னணி, பஜ்ரங்தள், விஸ்வ இந்து பரிஷத் என்று பல்வேறு பெயர்களுடன் இவை தம் கொடுரக் கரங்களை விரித்திருக்கின்றன. மாணவர்கள் மகளிர் என்று கூட விட்டு வைக்காமல் அமைப்பு ரீதியாக திரட்டி நச்சு சித்தாந்த விதைகளை தூவி வருகின்றன. 

ஒடுக்கப்பட்ட.. நசுக்கப்பட்ட.. மண்ணின் மைந்தர்களான ஆதிவாசிகள், தலித்துகளை அடித்தளமாகக் கொண்டு இந்த நாட்டின் சமநிலையைச் சீர்குலைக்கப் பெரிதும் முயன்று வருகின்றன. அதன் கொடுமையான நிகழ்கால உதாரணம்தான் குஜராத் மண்ணெங்கும் பிரவாகமெடுத்து ஓடிய இந்திய முஸ்லிம்களின் ரத்தப் பெருவெள்ளம். மனிநேயம் வெட்கித் தலைகுனியும் வண்ணம் அரங்கேறிய , முஸ்லிம் பெண்களுக்கெதிரான அகோர பாலியல் வன்கொடுமைகள் நெஞ்சைப் பதற வைப்பவை. எந்த மனித நேயம் மிக்கவரும், ஊடகங்களும் இந்த கொடுமையைக் கண்டிக்கவில்லை என்பது கவலையளிப்பது.



வெறும் இரண்டு விழுக்காடுக்கும் குறைவாக உள்ள மேல்சாதியினரின் தன்னலங்களுக்கான அரசியல் சூதாட்டங்களை இந்த வகுப்புவாதப் பேய்கள் ஆடி வருகின்றன. அதிகார மேலாண்மைக்காக எல்லாவிதமான சக்தி சாமார்த்தியங்களையும் கையில் எடுத்துள்ளன. இந்தத் தீய சக்திகள் சித்தாந்த ரீதியாக எந்த விதத்திலும் தம்மோடு தொடாபில்லாத சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள் போன்ற சகோதரர்களையும் ஒன்று திரட்டியுள்ளன. முஸ்லிம்களுக்கு எதிரான உள்நாட்டு யுத்தம் தொடுத்திருக்கின்றன. 

சிறுபான்மை இனம், எதுவாக இருந்தாலும், அதன் கொள்கை, கலாச்சாரத் தனித்தன்மைகளை ஒழித்தொழிக்கும் போக்கின் பாசிச பயங்கரவாதத்தின் நவீன வடிவமிது!

இந்தக் கொன்றொழிப்பில் இன்று முஸ்லிம்கள், நாளை கிருத்துவர்கள் என்று இருந்தாலும் அதற்கு அடுத்ததாக சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், ஆதிவாசிகள் தலித்துகள் என்று இந்தப் பட்டியல் தொடரும்.

இந்த நிலையில் அழைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்கள் சில முக்கியமான அம்சங்களை நெஞ்சில் பதித்துக் கொள்ள வேண்டும். அழைப்பியல், முஸ்லிம் சமூகத்தின் ஒட்டு மொத்தப் பணியாக இருப்பதால் ஒவ்வொரு முஸ்லிமும் கீழ்க் கண்ட இந்த அம்சங்களை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.



<<<< இந்த மண்ணின் ஒவ்வொரு துகளும், தங்கள் மூதாதையரான ஒடுக்கப்பட்ட சமூகத்து மக்கள்.. மண்ணின் மைந்தர்கள்... உதிரம் சிந்தி கட்டிக் காத்தது. அதனால், இந்த மண் தங்களுக்குச் சொந்தமானது.

<<<< மேல்சாதியினரின் தீண்டாமை.. அடக்குமுறைகளைச் சகித்துக் கொள்ள முடியாமல் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களே முஸ்லிம்கள்.

<<<< தாய் மண்ணான தங்களது இந்தியாவில் மிகத் தேர்ந்த மேல்சாதி வகுப்புவாத அமைப்புகள் திட்டமிட்டு தொலைநோக்குடன் முஸ்லிம்களையும் அவர்கள் சார்ந்த கொள்கையான இஸ்லாத்தையும் முற்றிலும் ஒழித்திட முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

<<<< இந்த வகுப்புவாத மனித இன விரோதிகள் மக்கள் மனங்களில் துவேஷ நச்சுக் கலப்பதில் வெற்றியும் பெற்றுவருகிறார்கள்.

<<<< முஸ்லிம்கள் தங்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் சூழ்ச்சிகள் கடும் விளைவுகளின் தீவிரத்தனத்தை அறியவில்லை.

<<<< இஸ்லாத்தை நடைமுறை வாழ்வில் செயல்படுத்துவதற்கு முஸ்லிம்கள் முயல்வதில்லை.

<<<< உயிரினும் மேலாக, தாங்கள் பின்பற்றிவரும் கொள்கையை அடுத்தவர்வரை எடுத்து வைப்பதில் முஸ்லிம்கள் அக்கறை காட்டுவதில்லை.

அழைப்புப் பணியின் முக்கிய அடிப்படை இது:

வாழும் சமூகத்தின் மேல் கொள்ளும் அளவில்லாத பாசம்!

சக மனிதர்களின் மீது காட்டும் அபரீதமான நேசம்!

- இறைவன் நாடினால்... அழைப்பது தொடரும்

Related

அழைப்பியல் 3691989772166354154

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress